Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மாணவர்களுடன் கபாலி படம் பார்த்த ஆட்சியர்!

Webdunia
சனி, 30 ஜூலை 2016 (10:50 IST)
கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை பார்த்தார். இவர்களுடன் பத்தினம் திட்டா நகரசபை தலைவர் ரெஜினி பிரதீப், துணை தலைவர் ஜேக்கப் மற்றும் கவுன்சிலர்களுடன் படம் பார்த்தனர்.


 
 
கடந்த 22-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் உலகமெங்கும் வெளியான கபாலி திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு குறையவில்லை.
 
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் பள்ளி மாணவர்கள் விடுதி ஒன்றிற்கு சென்றபோது மாணவர்கள் பலரும் ஆட்சியரிடம் கபாலி படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து ஆட்சியர் ஹரிகிஷோர் மாணவர்கள் கபாலி படம் பார்க்க ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் விடுதி மாணவர்கள் அனைவரையும் அருகில் உள்ள தியேட்டருக்கு அழைத்து சென்று அவர்களுடன் கபாலி திரைப்படத்தை பார்த்தால் ஆட்சியர் ஹரிகிஷோர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments