Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் காஷ்மீர் பயணம்; கிராமத்தில் திடீர் குண்டுவெடிப்பு! – காஷ்மீரில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (11:58 IST)
பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சென்றுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கிராமத்தில் குண்டு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தேசிய பஞ்சாயத்ராஜ் தினம் கொண்டாடப்படும் நிலையில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியில் நடைபெறும் பஞ்சாயத்ராஜ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்காக இன்று பிரதமர் மோடி காஷ்மீர் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜம்முவின் பிஷ்னா பகுதியில் உள்ள லாலியன் என்னும் கிராமத்தில் விவசாய பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதேசமயம் பிரதமர் கலந்து கொள்ள உள்ள பள்ளி பஞ்சாயத்து கிராமத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

வாழ்நாள் முழுவதும் தினமும் எவ்வளவு பானிபூரி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. எவ்வளவு தெரியுமா?

அ.தி.மு.க.-வில் இருந்து வந்தவர்கள்தான் முதல்வருக்கு டப்பிங் கொடுக்கிறார்கள் – அண்ணாமலை பதிலடி

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments