Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திப்பு சுல்தான் வரலாறு, இனி பாடப்புத்தகங்களில் கிடையாது” ..

Arun Prasath
வியாழன், 31 அக்டோபர் 2019 (12:04 IST)
கர்நாடக அரசு திப்பு சுல்தானின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரின் புலி என்று வரலாற்றாசிரியர்களினால் அழைக்கப்படும் திப்பு சுல்தான், 1700களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மைசூர் ராஜ்ஜியத்தின் மன்னர் ஆவார். இவரை குறித்த வரலாறுகள் தவறானவை என பாஜகவினர் பல வருடங்களாக கூறிவருகின்ற நிலையில், தற்போது கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு , திப்பு சுல்தான் வரலாற்று பாடத்தை, நடுநிலைப்பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிஜேபி எம்.எல்.ஏ. அப்பச்சு ராஜன், “திப்பு சுல்தானை நாங்கள் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனையில் உள்ளோம்” என கூறியுள்ளார். மேலும் இது குறித்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, “கர்நாடகா அரசு திப்பு சுல்தானின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க ஆலோசித்து வருகிறது” என கூறியுள்ளார். எடியூரப்பா எப்பொழுதும் திப்பு சுல்தானை வரலாற்று நாயகனாக நம்பியதில்லை என கூறப்படுகிறது.

திப்பு சுல்தான் மீது பாஜகவினர் வைக்கும் குற்றச்சாட்டாக கூறப்படுவது என்னவெனில், ”திப்பு சுல்தான் பலரை இஸ்லாம் மதத்திற்கு வலுகட்டாயமாக மாற்றினார், அவர் பெர்சிய மொழியை ஆட்சி மொழியாக வைத்திருந்தார்” என்பது தான்.

திப்பு சுல்தானின் வரலாற்று பாடத்தை நீக்குவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸை சேர்ந்த முன்னாள் கர்நாடகா முதல்வர் சித்தராமையா “திப்பு சுல்தானின் வரலாற்றை நீக்குவதென்பது, வரலாற்றை மொத்தமாக சிதைப்பதற்கு சமமாகும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

சென்னை சென்ட்ரல் அருகே தபால் நிலைய மேற்கூரை இடிந்து விபத்து.. ஊழியர்கள் படுகாயம்..!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்.! தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments