Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரம்: கர்நாடகா அரசு மேல்முறையீடு மனு தாக்கல்..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (18:03 IST)
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
 
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்து முடிவு எடுக்கவும் மனுவில் கர்நாடகா அரசு கோரிக்கை வைத்துள்ளது.
 
அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு 3,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீர் பற்றாக்குறை இருப்பதாலும், போராட்டங்கள் நடப்பதாலும் உத்தரவை நிறைவேற்ற முடியாத சூழலில் உள்ளதாக கர்நாடக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments