Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு கொல்லுங்கள்: முதல்வரின் பேச்சால் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (09:35 IST)
கொலையாளிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொல்லுங்கள் என பொது இடத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி செல்போனில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹொன்னலகரே பிரகாஷ் நேற்று வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல்வர் குமாரசாமி உடனே சம்பவ இடத்திற்கு வந்து கொலையாளிகளை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று செல்போனில் ஒருவரிடம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் இந்த செல்போன் பேச்சை அங்கிருந்த மீடியாக்காரர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி ஒரு முதல்வரே சட்டத்தை கையில் எடுத்து இப்படி பேசலாமா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து ஹொன்னலகரே பிரகாஷ் கொலை செய்யப்பட்டதால் உணர்ச்சிவசத்தில் அப்படி பேசிவிட்டதாகவும் அது ஒரு முதல்வரின் உத்தரவு அல்ல என்றும், கொலையாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments