Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதியை கத்தியால் குத்திய மர்ம நபர்; பெங்களூரில் பரபரப்பு

Webdunia
புதன், 7 மார்ச் 2018 (16:55 IST)
பெங்களூரில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் நீதிபதியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கர்நாடகா தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள லோக் அயுக்தா அலுவகத்தில் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென நீதிபதியை கத்தியால் குத்தியுள்ளார்.
 
சத்தம் கேட்டு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை தடுத்து, நீதிபதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நீதிபதியை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிபத்இ தக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
 
மேலும் நீதிபதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments