ஜார்கண்ட் தேர்தல்: எக்சிட்போல் முடிவுகள்

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (20:25 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் எக்சிட்போல் முடிவுகள் வெளியாகியுள்ளது
 
சி வோட்டர் எக்ஸிட் போல் முடிவின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும், காங்கிரஸ் கட்சி அடங்கிய மகாகட்பந்தன் தனிப்பெரும் கூட்டணியாக உருவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு 35 தொகுதிகளும், பாஜக கூட்டணிக்கு 32 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று சி வோட்டர் கணித்துள்ளது
 
இந்திய டுடே கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் மற்றும் ஜேஎம்எம்-ஆர்ஜேடி அணி 38 முதல் 50 இடங்களை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் மெஜாரிட்டிக்கு 42 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தொங்கு சட்டசபை அல்லது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என எக்சிட்போல் கூறியிருப்பது உண்மையா? என்பதி வரும் 23ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..

விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்‌ஷன்!..

எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...

தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments