Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர்? – ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (14:33 IST)
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நடிகையை கொள்ளையர்கள் கொன்றுவிட்டதாக நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி.இவர் படத்தயாரிப்பாளரான பிரகாஷ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று பிரகாஷ்குமாரும், ரியாவும் காரில் கொல்கத்தாவுக்கு சென்றுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மகிஷ்ரேகா என்ற இடத்தில் கார் சென்றபோது வழிமறித்த மர்ம நபர்கள் பிரகாஷ்குமாரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. அவரை காப்பாற்ற வந்த ரியாவை சுட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடியதாகவும், அதன்பின்னர் ரியாவை காரில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் பிரகாஷ் கூறியுள்ளார்.

ஆனால் மருத்துவமனை செல்லும் முன்பே ரியா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரியாகுமாரியின் பெற்றோர் பிரகாஷ் தொடர்ந்து ரியாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இந்த கொலை சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் பிரகாஷிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் அளித்த பதில்கள் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் பிரகாஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments