Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது.. எதிர்த்து ரிட் மனு தாக்கல்..!

Hemant Soren

Siva

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:22 IST)
ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனைஅமலாக்கத்துறை கைது செய்த நிலையில் அவரது கைதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ரிட் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், ரிட் மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறப்படுகிறது.
 
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, ஹேமந்த் சோரன் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட  மனுவில், ஹேமந்த் சோரன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அவருக்கு அரசியல் விகாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு முன்கூட்டியே சம்மன் அனுப்பாமல் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரனின் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அரசு நிலத்தை, தனியார் நிறுவனங்களுக்கு விற்க ஹேமந்த் சோரன் உதவியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.600 கோடி ஆகும். இந்த நிலத்தை விற்றதில் அரசுக்கு ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. 
 
இந்த குற்றச்சாட்டை ஹேமந்த் சோரன் மறுத்து வரும் நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே ஐ.ஏ.எஸ் அதிகாரி ரஞ்சன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்வு