Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள தங்கக்கடத்தல் விவகாரம்: நகைக்கடை உரிமையாளர் 2 பேர் கைது

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (18:30 IST)
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்க கடத்தல் விவகாரம் குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த தங்க கடத்தலில்  ஈடுபட்டிருந்த ஸ்வப்னா சமீபத்தில் பெங்களூரில் கைது செய்யப்பட்டார் என்பதும், இதனையடுத்து தங்கக் கடத்தல் வழக்கில் தகவல் தொடர்பு துறை செயலாளர் சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும் தெரிந்ததே
 
இந்த தங்க கடத்தலுக்கு முதல்வர் பினராய் விஜயனுக்கு தொடர்பு உண்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் அவரது அரசின்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
 
இந்த நிலையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னாவிடமிருந்து நகைக் கடையினர் கடத்தல் தங்கம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கேரள போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments