Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு நான்கு தலைநகரங்கள் ? – ஜெகன் மோகனின் புதிய திட்டம் !

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:37 IST)
ஆந்திர மாநிலத்திற்குப் புதிதாக நான்கு தலைநகரங்களை அறிவிக்கும் திட்டத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவின் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி சாதிவாரியாக ஐந்து துணை முதலமைச்சர்களை நியமித்தார். அது இந்தியா முழுவதும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. இதையடுத்துத் தலைநகர் விஷயத்திலும் அவர் இதேப் போல ஒருத் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஹைதராபாத் தெலங்கானாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. அதனால் ஆந்திராவின் தலைநகராக அமராவதி நிர்ணயிக்கப்படும் என அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். 33,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அமராவதி நகர் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அந்த திட்டத்தைக் கைவிட்டுவிட்டு புதிதாக நான்கு தலைநகர்களை அமைக்க தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை ஆந்திர மாநில பாஜக எம்.பி டி.ஜி.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments