Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வரும் அமேசான் நிறுவனர்: மோடியை சந்திப்பாரா?

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (11:47 IST)
அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ் இந்தியா வரும் நிலையில் பிரதமரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறு, குறி தொழில்களை தொழில்நுட்பங்கள் மூலம் மேம்படுத்துவது குறித்த நிகழ்ச்சி ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. தொழில் வல்லுனர்கள் மற்றும் பலதுறை நிபுணர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் அமேசான் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் பங்கேற்க உள்ளார்.

சமீப காலத்தில் இந்தியாவின் மிகப்பெரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாக அமேசான் வளர்ந்துள்ளது. பல சிறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அமேசான் மூலம் தேசிய அளவில் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக கூறப்படும் நிலையில், அமேசான் போன்ற நிறுவனங்களால்தான் சிறு, குறு தொழில்கள் நசிந்து விட்டதாகவும் புகார்கள் உள்ளன. இந்நிலையில் ஜெப் பெசோஸ் இந்தியா வருவது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா வரும் ஜெப் பெஸோஸ் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments