Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பி அடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி!!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (13:14 IST)
சிவில் சர்வீஸ் தேர்வில் காப்பியடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி அவரது மனைவி மற்றும் ஆசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  


 
 
ஐபிஎஸ் அதிகாரி ஷபீர் கரீம் சிவில் சர்வீஸ் தேர்வில் புளூடூத் கருவியை மறைத்து வைத்து காப்பியடித்து சிக்கிக்கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவரது ஆசிரியர் ராம் பாபுவும் உதவியது தெரியவந்தது. 
 
இதனையடுத்து அவர்களையும் போலீஸார் தெலுங்கானாவில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, செல்போன், புளூடூத், கேள்வித்தாள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 
 
புளூடூத், செல்போனை பயன்படுத்தி காப்பி அடிக்க பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பனியன், சட்டையை ஷபீர் கரீம் அணிந்ததும், அதை அவரின் மனைவி வடிவமைப்பு செய்து கொடுத்ததும் தெரியவந்துள்ளது. 
 
விரிவான விசாரணைக்கு பிறகு ஷபீர் கரீம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி மற்றும் ஆசிரியரும் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments