Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மாயமான இந்திய போர் விமானம்

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (16:43 IST)
இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானத்தில் விமானிகள் பயிற்சியில் ஈடுப்பட்டிந்தபோது திடீரென மாயமானது.




 

 
அசாம் மாநிலம் தேஜ்பூர் அருகே இந்திய விமான படைக்குக்கு சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 என்ற போர் விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது திடீரென விமானம் காணாமல் போனது. ரேடார் சிக்னலில் இருந்து 60 கி.மீ தொலைவில் விமானம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ராணுவ ரேடாரில் இருந்து போர் விமானம் காணாமல் போனதால் விமானம் குறித்து எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை. மேலும் அதில் பயணித்த இரண்டு விமானிகளின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரேடாரில் இருந்து மறைந்த இடத்தை சுற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments