Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 நாள் போருக்கு தயராகும் இந்திய ராணுவம்!!

Webdunia
செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:06 IST)
இந்திய ராணுவம் இந்த ஆண்டு இலக்காக 40 நாள் போருக்கு தயாராகும் வகையில் ஆயத்தப்படுத்தி வருகிறதாம். 

 
ஆம், இந்திய ராணுவம் 40 நாள்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மொத்தம் 13 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவம் படிப்படியாக ராக்கெட், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் என 40 நாள்கள் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைக் குவித்து வருகிறது.
 
ராணுவத்தில் வழக்கமாக 10 நாள்கள் முழு வீச்சுடன் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கும். இதை, வரும் 2022- 2023 ஆம் ஆண்டுக்குள் 40 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயுதங்களை இருப்பில் வைப்பதால், இந்தியா போருக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தமில்லை என்றும்  தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments