Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை! என்ன காரணம்?

Mahendran
செவ்வாய், 13 மே 2025 (12:34 IST)
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலை  மேற்கொண்டது. பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா சுட்டு தள்ளியது. இதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை மையங்கள் சேதமடைந்தன.
 
இதையடுத்து, பாகிஸ்தானும் ஜம்மு-காஷ்மீர் சில பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த பதிலடி சம்பவங்களுக்கு பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒருமித்த முடிவை சனிக்கிழமை இரவு எடுத்துள்ளன.
 
போர் நிறுத்தத்தை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பினரும் தங்கள் ராணுவ இயக்குநர்களின்  வழியாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இந்நிலையில், எல்லையில் நிலவும் அமைதி சூழலை கருத்தில் கொண்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  ராணுவ தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதுகாப்புத் துறைச் செயலாளர், மூன்றுபடைகளின் தலைமை தளபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
எல்லையில் அமைதியான சூழல் உருவாகும் நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments