Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை முதலமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: பரபரப்பு தகவல்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:38 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் அஜித் பவார் என்பவர் வீட்டில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அம்மாநிலத்தில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே அவர்களும் துணை முதலமைச்சராக அஜித் பவார் அவர்களும் பதவியேற்று செயல்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
 
இந்த தகவல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் வீட்டிலேயே வருமான வரி சோதனை நடப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு ஆட்டம் கண்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments