Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தில் டெல்லி அரசு: ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:58 IST)
டெல்லியை ஆண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி முறையான வருமானவரி செலுத்தாத காரணத்துக்காக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கடந்த 2014- 2015 ஆம் ஆண்டுகளில் கட்சிக்கு நன்கொடை பெற்றதில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 
30 கோடி ரூபாய் அபராதம் செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிசம்பர் 7ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி பெற்ற நன்கொடைகள் அனைத்துமே சட்டத்துக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், வரி செலுத்த வேண்டிய வருமானத்துக்கு வரி செலுத்தாதது தொடர்பாக 30 கோடியே 67 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய வரலாற்றில், ஒரு கட்சியின் நன்கொடைகள் அனைத்தும் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதிகளுக்கு எல்லாம் கணக்கு உள்ளது. அரசியல் பழிவாங்கும் முயற்சியின் உச்சம் இந்த நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments