Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்- கலெக்டர் உத்தரவு

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (19:24 IST)
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில்  பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காரைக்காலைச் சேர்ந்த  35 வயது பெண் ஒருவர்  கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு,புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த மருத்துவர்கள், இணை நோய்கள் அவருக்கு இருந்ததால்  உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் 20 க்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் ஒன்றரை ஆண்டிற்குப் பின் கொரொனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் கூடும் இடங்களில்  முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments