Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரள மாநிலத்தில் தொடரும் கனமழை.. 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

Mahendran
சனி, 25 மே 2024 (08:35 IST)
தமிழகம் போலவே கேரளாவிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கேரளாவில் பருவமழை தொடங்க இருப்பதால் அங்கு மழைக்கான எச்சரிக்கை அவ்வப்போது விடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  
 
இந்த நிலையில் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மேலும்  கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் என்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி மறு அறிவிப்பு வருமாறு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
ஏற்கனவே கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள ஏழு மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகம் மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலும் மழை பெய்து வருவதை அடுத்து நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments