Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்பதால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான இஸ்லாமிய பெண்கள்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (00:49 IST)
ஹரியானாவை சேர்ந்த பெண் ஒருவர், தானும், தனது உறவுக்கார சிறுமியும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
 

 
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மேற்கு ஹரியானாவை அடுத்த மேவத் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இஸ்லாமிய பெண் ஒருவரையும், அவரது 14 வயதான உறவினர் ஒருவரையும் பல பேர் கொண்ட கும்பல் அவர்களது இல்லத்திலேயெ வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும், தன்னுடைய இரு உறவினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் இஸ்லாமியர்கள் என குற்றஞ்சாட்டி தாக்குதல்தாரர்கள் இந்த வன்முறையை தொடுத்துள்ளனர்.
 
ஆனால், அந்த குடும்பத்தினர் மாட்டிறைச்சி உண்ணவில்லை என மறுத்துள்ளனர். இந்து சமூகத்தில் பசுக்கள் புனிதமாக கருதப்படுகின்றன.
 
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவாரங்களுக்கு முன், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போதுதான் அந்த பெண் இப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இந்த சம்பவம் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இருந்து 62 மைல் தொலைவிலேயே உள்ள மேவத் மாவட்டத்தில் நடந்துள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்