Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட்டால் திரையரங்குகளில் கட்டண சலுகை.. ஹரியானா அரசு அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 10 மே 2024 (10:42 IST)
இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 3 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளது என்பதும் மே 13, 20 , 25 மற்றும் ஜூன் 1 ஆகிய நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் ஹரியானாவில் மே 25ஆம் தேதி 10 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
இதன்படி மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட்டு விரலில் உள்ள மையை காண்பித்தால் திரையரங்குகளில் கட்டண சலுகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் திரையரங்கு வளாகத்தில் உள்ள ஹோட்டல்களிலும் ஓட்டு போட்டவர்களுக்கு கட்டண சலுகை கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் திரையரங்கு உரிமையாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு தரும் கட்டண சலுகையை அரசே தந்துவிடும் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments