Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவி கிடைத்த சில மணி நேரத்தில் ராஜினாமா! – குலாம் நபி ஆசாத் செயலால் காங்கிரஸ் அதிர்ச்சி!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (10:00 IST)
காங்கிரஸில் பதவி அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த பதவியை மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும் மாநில அரசியல் விவகார குழுவில் இருந்து விலகியுள்ள அவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது வயது மூப்பின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments