Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் தேர்தல்: 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (08:47 IST)
குஜராத் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று காலை சற்றுமுன்னர் வாக்குப்பதிவு தொடங்கியது

இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வரும் 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிச.18ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி நம்பிக்கை.தெரிவித்துள்ளனர்.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஜாம்நகர் ஊரக தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், ஜகாடியா, காண்டேவி தொகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 3 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும் குஜராத் தேர்தலில் முதல் முறையாக அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் வாக்களித்தது தொடர்பான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.

குஜராத் தேர்தல் களத்தில் முதல் கட்ட தேர்தலில் 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  இன்று மட்டும் 2.12 கோடி பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்,

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments