Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்சாலையில் வாயு கசிவு: 9 பேர் உயிரிழப்பு, 11 பேர் கவலைக்கிடம்..!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (11:03 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு, ஏற்பட்டதால்  9 பேர் பலியானதாகவும் 11 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா என்ற பகுதியில் தொழிற்சாலை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வாயுகசிவு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 9 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் ஒரு சிலர் இந்த வாயு கசிவு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் பதினோரு பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 
 
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சென்றுள்ளதாகவும் வாய்வு கசிவு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments