Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதம்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2018 (16:01 IST)
ராஜஸ்தானில் மர்ம நபர்கள் சிலர் காந்தியின் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் தலைவர்களின் சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியா முழுவதும் பெரியார் சிலை, காந்தி சிலை, அம்பேத்கர் சிலை உள்ளிட்ட சிலைகள் மர்ம நபர்களால் சேதபடுத்தப்பட்டது.
 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஜ்சம்ந்த் மாவட்டத்தில் காந்திஜி சிலையின் தலை பகுதியை சில மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கேரளாவில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

8 நாட்களுக்கு பின் குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

அடுத்த கட்டுரையில்
Show comments