Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:23 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போதிலும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவித்து வரும் நிலையில் ஒரு மாநிலம் மட்டும் ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆகஸ்ட் 31 வரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ள மாநிலம் மணிப்பூர். மாநிலத்தின் முதல்வர் பைரன்சிங் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் அம்மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
மணிப்பூரில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4390 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவை மட்டும் இயங்கும் என்றும் மற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இயற்கை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வரும் இந்த ஊரடங்கை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments