Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி.. அரசு மருத்துவமனைகளில்.! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (08:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் 18 முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வந்தது.

தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் 6 மாதங்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்தப்பட்டது.

தற்போது 18 வயது முதல் 60 வரை உள்ள அனைவருக்கும் அரசு மருத்துவமனைகள் மூலமாக இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று முதல் 75 நாட்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments