Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் மீண்டும் கனமழை: கடல் சீற்றத்திற்கு வாய்ப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (10:26 IST)
மகாரஷ்டிராவில் மீண்டும் கனமான மழை பெய்து வருவதால், வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மும்பையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. முக்கியமாக மும்பையின் சயான், கோரேகோன், கல்யாண் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் மத்திய ரயில் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் புறநகர் ரயில்களில் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருவதால் பேருந்துகள் முடங்கியுள்ளன.

மேலும், இந்த கனமழையால் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments