Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்: கோலாகமாக தொடக்கம்

Webdunia
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2019 (10:05 IST)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருவிழா தேரோட்டம், இன்று கோலாகலமாக தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், கடந்த 27 ஆம் தேதி, ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் வீதி உலா நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று, காலை தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. தேரில் 7 வடங்கள் இணைக்கப்பட்டுள்ளன எனவும், அதில் 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.எல்.ஏக்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்ட் ராஜராஜன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மேலும் இந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments