Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரத்தில் ஆபத்து? பெங்களூரில் வெள்ள அபாய எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 4 ஜூன் 2018 (13:34 IST)
தென் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என கர்நாடக வானிலை மையல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கர்நாடகாவில் ஜூன் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நாள்தோறும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு மழை பெய்யும் என்றும் பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால், பெங்களூருவின் தாழ்வானப் பகுதிகளான ராஜராஜேஸ்வரி நகர், கிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மகாதேவபுரா மற்றும் பொம்மனஹல்லி ஆகிய ஐந்து பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கர்நாடக மாநிலத்தின் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments