Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரிஸ் பறிமுதல்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (16:05 IST)
ரூ.9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரிஸ் பறிமுதல்!
தங்கத்தை விட விலை மதிப்பானது என்று கூறப்படும் திமிங்கலத்தின் வாயிலிருந்து வரும் திரவம் ஆம்பர்கிரிஸ் கடத்தும் நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது 
 
ஆம்பர்கிரிஸ் என்ற சொல்லக்கூடிய இந்த பொருளை மிக அதிக விலைக்கு சந்தையில் விற்பனையாவதால் இதனை கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரூபாய் 9 கோடி மதிப்புள்ள ஆம்பர்கிரிஸ் மகாராஷ்டிர மாநில காவல்துறை பறிமுதல் செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமிங்கலத்தின் வயிற்றில் உருவாகி அதனால் வெளியேற்றப்பட்ட மெழுகுபோன்ற இந்த பொருள் தான் ஆம்பர்கிரிஸ் என்று கூறப்படுவதுண்டு. மருந்து தயாரிக்கும் மிக மிக விலை உயர்ந்த வாசனை திரவம் தயாரிக்கவும் ஆம்பர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது
 
சர்வதேச சந்தையில் ஒரு கிலோ ஆம்பர்கிரிஸ் விலை ரூபாய் ஒரு கோடி என விற்கப்படுவதால் இதற்கு மிகவும் மதிப்பு அதிகம். திமிங்கலத்தை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளதால் ஆம்பர்கிரிஸ் வைத்திருப்பதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  மும்பையில் சட்டவிரோதமாக 9 கிலோ ஆம்பர்கிரிஸ் வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர் 
 
 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments