Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல் எக்ஸ்.இ. தொற்று - INSACOG சொல்வது என்ன??

Webdunia
புதன், 4 மே 2022 (08:46 IST)
இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்.இ. தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்சாகோக் ( INSACOG ) நேற்று உறுதி செய்துள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ்இ என்ற தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் 7 வகையான உருமாறிய நிலையில் இப்போது ஒமைக்ரான் வைரசில் இருந்து பி.ஏ.-1, பி.ஏ.-2 என்ற மேலும் 2 வகை வைரஸ் உருவாகி இருக்கிறது. பி.ஏ.-1, பி.ஏ.-2 ஆகிய இரண்டு வைரஸ்களும் ஒரே நபரின் உடலில் தொற்றினால், அவை இரண்டும் இணைந்து உருவாக்குவதுதான் இந்த எக்ஸ்இ வகை வைரஸ்.
 
கொரோனா ஒமைக்ரான் வைரஸின் எக்ஸ்.இ. துணை வகை மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்.இ. தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான இன்சாகோக் ( INSACOG ) நேற்று உறுதி செய்துள்ளது.
 
ஒமிக்ரான் துணை மாறுபாட்டான எக்ஸ்இ உறுதிப்படுத்தப்பட்டாலும் இதன் கண்டறியப்பட்ட இருப்பிடம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இதன் பரவல் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments