Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு அதிகாரிகளை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய முன்னாள் அமைச்சர் – வெளியான வீடியோ!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:32 IST)
தெலங்கானாவில் நிலத்தில் கால்வாய் பணிகளை விரிவாக்க வந்த அரசு அதிகாரிகளிடம் முன்னாள் அமைச்சர் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நலகொண்டா மாவட்டத்தில் உள்ள உருமட்லா என்ற பகுதியில் கால்வாய் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மாநில அரசு நிலங்களைக் கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் காங்கிரசை சேர்ந்த முன்னாள் அமைச்சர் குத்தா மோகன் ரெட்டியிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் அமைக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் துப்பாக்கியை காண்பித்து அதிகாரிளை பணி செய்யவிடாமல் தடுத்தார். இதனை வீடியோ எடுத்த அதிகாரிகளையும் அவரது சொந்தக்காரர்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் அங்கிருந்து ஓட ஆரம்பித்துள்ளனர். நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments