மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

Prasanth Karthick
வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:57 IST)

மத்திய பிரதேசத்தில் பசுக்களுடன் தவறான உறவு மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை தேவை என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. ஆனால் நாளாக நாளாக தற்போது விலங்குகளும் கூட பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்ப முடியாத நிலை உருவாகி வருகிறது. 

 

இந்த சம்பவம் நடந்திருப்பது பசுக்களை புனிதமானதாக கருதும் மத்திய பிரதேசத்தில் என்பதுதான் மேலும் ஒரு அதிர்ச்சி. சமீபத்தில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் இரவு நேரத்தில் யாரும் பார்க்காதபோது பசுமாடுகளுடன் உறவுக் கொள்கிறார். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கின.

 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும், துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் கைது செய்துள்ளனர். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்