Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளைக் காவு வாங்கும் மூளைக்காய்ச்சல்:பீதியில் பீகார் மாநிலம்

Webdunia
திங்கள், 17 ஜூன் 2019 (12:29 IST)
பீகார் மாநிலம், முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 94 ஆக உயர்வு.
கடந்த சில நாட்களுக்கு முன், பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில், பல குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

பின்பு, அக்குழந்தைகளுக்கு முசாஃபர்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுகோஸ் அளவு குறைந்திருந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மூளைக்காய்ச்சலால் உயிரிழப்பு அதிகமாகி வருவது, முசாஃபூர் பகுதியிலுள்ள மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments