Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிப்பு – தேர்தல் ஆணையர் அறிவிப்பு !

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (14:22 IST)
ஆட்சிக்காலம் முடியவுள்ள மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷிடிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசும், ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசும் நடைபெற்று வருகிறது. இந்த அரசுகளின் பதவிக்காலம் நவம்பர் மாதத்தோடு முடிகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா .’இவ்விரு மாநிலங்களுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 24 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 8.94 கோடி வாக்காளர்களும், ஹரியானாவில் 90 தொகுதிகளில் 1.82 கோடி வாக்காளர்களும் உள்ளனர். பதற்றமானத் தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். ’ எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி நடந்துவரும் இந்த இரு மாநிலங்களில் ஆட்சியை யார் கைப்பற்றப்போவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments