இவன் கூப்பிட்டா போகணுமான்னு நினைக்காதீங்க! எதிர்கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்!

Prasanth Karthick
திங்கள், 3 மார்ச் 2025 (11:33 IST)

தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக சில கட்சிகள் கூறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழ்நாட்டில் தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக கருதும் திராவிட முன்னேற்றக் கழகம், மாநிலத்தின் அனைத்து கட்சிகளையும் இதுகுறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

 

ஆனால் பாஜக, நாம் தமிழர் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளன.

 

இந்நிலையில் நாகப்பட்டிணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வர முடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இதை அரசியலாக பார்க்காதீர்கள். இது நம்முடைய உரிமை. இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று கௌரவம் பார்க்காதீர்கள்” என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments