Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர் செஞ்சகாரியம்! சிகிச்சைக்கு வந்த பெண் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 5 மார்ச் 2019 (17:04 IST)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில்  ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.


 
புதுச்சேரி பங்கூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், ஜிப்மர் மருத்துவனைக்கு குடல் இறக்கம் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார்.
 
அப்போது பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனையின் போது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  அப்பெண்  உறவினர்களிடம் புகார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனை பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மருத்துவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தரப்பில் இச்சம்பத்தில் உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்