Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் என்னை நினைவு வைத்திருக்கிறார்கள்? விரக்தியில் தேவகவுடா

Webdunia
புதன், 26 டிசம்பர் 2018 (15:38 IST)
அசாம் மாநிலத்தில் நேற்று போகிபீல் ரயில் பாலத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அசாமின் கிழக்கு பகுதி மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் 94 கிமீ நீளம் கொண்ட போகிபீல் பாலம் அமைந்துள்ளது. 
 
ஆனால், இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தேவகவுடா முகவும் வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு,
 
காஷ்மீருக்கு ரயில்பாதை, டெல்லி மெட்ரோ ரயில், அசாம் போகிபீல் ரயில், சாலைப் பாலம் ஆகிய திட்டங்களுக்கு என்னுடைய ஆட்சி காலத்தில்தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 
நான்தான் இந்த திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி முதல்கட்ட நிதியை ஒதுக்கினேன். இந்த திட்டங்களுக்கு முதல்கட்டமாக தலா ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்தேன். ஆனால், இந்தத் திட்டங்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. மக்கள் என்னை மறந்துவிட்டார்கள்.  என்றார்.
 
யார் என்னை நினைவு வைத்திருக்கிறார்கள்? சில நாளேடுகள் மட்டும் இந்த பாலம் குறித்து எழுதும் போது எனது பெயரையும் குறிப்பிடுகிறார்கள் அவ்வளவுதான் என வேதனையுடன் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments