Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநிலங்களை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்! – உஷாராகும் தென் மாநிலங்கள்!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:40 IST)
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கமே இன்னும் குறையாத நிலையில் மற்ற வைரஸ்கள், காய்ச்சல்கள் ஏற்பட்டு வருவது மக்களிடையே மேலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களில் வட மாநிலங்கள் சிலவற்றில் டெங்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 225 பேருக்கு டெங்கு உறுதியான நிலையில், அதில் 38 பேர் குழந்தைகளாவர். இதுபோல காஷ்மீரில் 20க்கும் அதிகமானோருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் உத்தர பிரதேசத்தில் காய்ச்சலால் 250 பேரும், டெங்கு காய்ச்சலால் 25 பேரும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments