Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் அபாயகரமான கொரொனா ? தேசிய நோய்க் கட்டுப்பாட்டு இயக்குநர் தகவல்

இந்தியாவில் அபாயகரமான கொரொனா ? தேசிய நோய்க் கட்டுப்பாட்டு இயக்குநர் தகவல்
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (15:28 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குக் கொரொனா வைரஸ் பரவியது. தற்போது கொரொனா 2 வது அலை பரவி வருகிறது.

இந்நிலையில், விரைவில் கொரொனா 3 அலை பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் 18 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு அரசு இலவசமாகவே கொரொனா தடுப்பூசி வழங்கி வருவதால் அனைவரும் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டுமென அரசு விழிப்புணர்வூட்டி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் அபாயகரமான கொரொனாவகை இந்தியாவில் இல்லை எனத் தேசிய நோய்க் கடுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  3வது அலை வர புதிய வகை கொரோனா வகை காரணமாக இருக்க முடியாது.மேலும் 6 மாதங்களில் கொரொனாவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும் எனவும் , அபாயகரமாக கொரொனா வகை எனக் கூறப்படும் c1, 2 மற்றும் mu வைரஸ் இந்தியாவில் இல்லை. எனவே மக்கள் பயப்பட  வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூடியூபில் ஆபாச பதிவு - டிக் டாக் திவ்யா கைது