Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி:காரில் இழுத்துச் செல்லப்பட்டு பலியான பெண்ணின் குடும்பத்திற்கு நிதி உதவி - முதல்வர் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (19:14 IST)
டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்ட உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு  நிதி உதவி அறிவித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் இளம்பெண் ஒருவர் புத்தாண்டு கொண்டாடிய விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது கார் ஒன்று மோதியதால் நான்கு கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக பலியானார்.

டெல்லியில் நடந்த இந்த கோர சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேரை போலீஸார்  கைது செய்துள்ளதாகவும் 5 பேரும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டுமென என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்ட உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்ணின் மரணத்திற்கு நீதி கிடைக்கவும் வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீடு எப்போது? முக்கிய தகவல்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments