Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று! – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (14:55 IST)
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என சோனியா காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி “டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இந்த வன்முறை சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ”டெல்லியில் நடந்த இந்த கலவரத்திற்கு மத்திய அரசும், உள்துறையும் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

அடுத்த கட்டுரையில்
Show comments