Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 முறைகேடு ? உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு ...

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (14:35 IST)
சமீபத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி சிபிசிஐடியின் அதிரடி விசாரணையில் பல ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரே மாவட்டத்தைத் தேர்வு செய்த தேர்வர்கள், அழியும் மையினால் தேர்வு எழுதியதாகவும், அதற்கு  அரசு ஊழியர்களே பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவும் பல உண்மைகள் விசாரணையில் வெளிவந்தன.
 
இதில், நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி  உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சார்பில்  வழக்கு தொடுத்துள்ளார்.
 
மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினை ‘அப்பா’ன்னு சொன்னா தப்பா இருக்காது..? - செல்லூர் ராஜூ கிண்டல்!

இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகளில்? - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை சென்ட்ரலில் இருந்து 2 புதிய மின்சார ரயில்.. எந்தெந்த பகுதிகளுக்கு தெரியுமா?

சென்னை மாநகராட்சியில் 6 புதிய மண்டலங்கள்.. உங்கள் பகுதி இருக்கிறதா என பாருங்கள்..!

கன்னியாகுமரி ஆலயத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு.. முதல்வரின் நிவாரண உதவி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments