Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 1 முறைகேடு ? உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு ...

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (14:35 IST)
சமீபத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதன்படி சிபிசிஐடியின் அதிரடி விசாரணையில் பல ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரே மாவட்டத்தைத் தேர்வு செய்த தேர்வர்கள், அழியும் மையினால் தேர்வு எழுதியதாகவும், அதற்கு  அரசு ஊழியர்களே பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாகவும் பல உண்மைகள் விசாரணையில் வெளிவந்தன.
 
இதில், நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், குரூப் 1 தேர்வு முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி  உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சார்பில்  வழக்கு தொடுத்துள்ளார்.
 
மேலும், மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியர்களை ராணுவத்தில் சேர்க்க வேண்டாம்! - ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்!

கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்! பாய்ந்து வந்து தலையை வெட்டி வீசியக் கணவன்!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவு: தமிழக அரசு திட்டம்..!

பாமக விதிகளின்படி அன்புமணியை ராமதாஸ் நீக்க முடியாது: வழக்கறிஞர் பாலு

அடுத்த கட்டுரையில்
Show comments