Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர்: கைது செய்யப்படுவாரா?

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (11:23 IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவையே பரபரப்பு ஏற்படுத்திய வழக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பதும் இந்த வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ள நிலையில் இன்று அவர் ஆஜராக உள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள நிலையில் டெல்லி முதல்வர் காணொளி மூலம் பேசி உள்ளார். 
 
அந்த காணொளியில் சிபிஐ மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு என்றும் அவர்கள் நினைத்தால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியும் என்றும் என்னை கைது செய்ய பாஜக கூறினால் சிபிஐ அதையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments