Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனாவா? பரபரப்பு தகவல்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (07:44 IST)
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனாவா?
நேற்று தமிழகத்தில் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் நேற்று அலுவலகத்துக்கு வரவில்லை என்றும், பாதுகாப்புத் துறை செயலாளருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இது குறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாரத் பூஷன் பாபு கூறியபோது, ’பாதுகாப்பு செயலாளரிடம் இருந்து தொலைப்பேசி வாயிலாக அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்றும், முக்கிய அதிகாரிகள் சிலரும் பணி நிமித்தமாக தொலைப்பேசி வாயிலாக மற்ற அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருகின்றார்கள் என்றும், மற்றபடி இதில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றும் கூறினார். 
 
மேலும் மத்திய துகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவர் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார். மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கே கொரோனா பரவியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments