Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு!

Sinoj
சனி, 13 ஜனவரி 2024 (20:54 IST)
5 ஜி சேவையை பயன்படுத்த  1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவில், ஏர்டெல், ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் ஆகிய நெட்வொர்குகள் உள்ளன. இந்த  நெட்வொர்க்களுக்கு என பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளன.

4 ஜி நெட்வொர்க் பிரபலமாக இருந்த நிலையில், அதிவேக இணையதள சேவையைப் பெறும் நோக்கில்,  ஜி நெட்வொர்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கென  5ஜி மொபைல் போன்களும் அறிமுகமாயின.

இந்த நிலையில், தற்போது பலரும்  5 ஜி சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், 1-10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

சோதனை அடிப்படையில், 4ஜி சேவை கட்டணத்தில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்ட நிலையில், இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 2024ல் நடைமுறைக்கு வரலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments