Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இறப்பு விகிதம் இந்தியாவில்தான் கம்மியாம்- உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

Webdunia
புதன், 24 ஜூன் 2020 (07:53 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் உலகிலேயே இந்தியாவில்தான் பாதிப்பு எண்ணிக்கை குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சமாக உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பலியாணவர்களின் எண்ணிக்கை 4.79 லட்சம் பேராக உள்ளனர். அதே போல இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4.4 லட்சமாகவும் பலி எண்ணிக்கை 14,323 ஆகவும் உள்ளது. தற்போது இந்தியாவில் பலி எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருப்பது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களை விட இந்தியாவில் இறப்பு விகிதம் கம்மியாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் லட்சம் பேரில் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைபவராக உள்ளார். ஆனால் உலகளவில் இந்த விகிதம் 6.06 ஆக உள்ளது. அதே விகிதம் இங்கிலாந்தில் 63.13, ஸ்பெயினில் 60.60, இத்தாலியில் 57.19, அமெரிக்காவில் .36.30, ஜெர்மனியில் 27.32, பிரேசிலில் 23.68, கனடாவில் 22.48, ஈரானில் 11.53, ரஷ்யாவில் 5.62 ஆகவும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments