Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு !

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (19:13 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.  இந்நிலையில் உலக அளவில் இதுவரை 18,65,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.1,15,138 பேர் உயிரிழந்துள்ளனர். 4,331,915 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாவினால் இதுவரை 324 பேர் பலி, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,352 ஆக அதிகரிப்பு என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் கொரோனாவில் தாக்கம் அதிகரித்துவருவதால், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்குமாறு பல மாநிலமுதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும், வரும்  ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments